நெய் என்றாலே சுவைதான் ஞாபகம் வரும். ஆனால் உண்மையிலேயே, நெய் என்பது உணவிற்காக மட்டுமல்லாமல். நம் வீட்டிலும், வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
சாப்பாட்டை தாண்டி உடலிற்கும் , மனதிற்கும், தோலின் பராமரிப்பிற்கும், மூத்தவர்கள் பரம்பரையாகப் பயன்படுத்தி வந்த ஆயுர்வேத சிகிச்சை முறைகளுக்கும் நெய் ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.
- நெய் ஏன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தே ஆகா வேண்டும்?
- அது எப்படி உணவுக்கு மட்டுமல்லாமல், நம் உடல், மனம், தோல், வாழ்க்கை முறை ஒவ்வொன்றிலும் நலத்தை கொடுக்கறது.
இந்த நெய்யின் பயணங்களின் அழகான பயணத்தை பற்றி காண்போம்.
2. நெய் காபி (Ghee Coffee) – சுவையோடு கலந்த ஆரோக்கியம்
3.நெய் தேநீர் (Ghee Tea) : உடலின் சுத்தம், சக்தி, செரிமானம்
4. ஆயில் புல்லிங் – பண்டைய ஆயுர்வேத மரபு
5.கோல்டன் மில்க் (Golden Milk) – நிம்மதியான உறக்கத்திற்கும் ஹார்மோன் சமநிலைக்கும்
1. ஷத தௌத க்ருதம் (100 முறை கழுவிய நெய்) :

ஷத தௌத க்ருதம் – “ஷத” என்றால் நூறு, “தௌத” என்றால் கழுவியது, “க்ருதம்” என்றால் நெய் – இந்தப் பழம்பெரும் ஆயுர்வேத அழகுப் பொருளின் பெயரே அதன் சிறப்பைச் சொல்லும்! வெண்கல பாத்திரத்தில் சிறிது நெய் எடுத்து அதனை 100 முறை குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி, கைகளால் சுழற்றி தயாரிக்கப்படும் இந்த கிரீம், உங்கள் தோலுக்கு மேன்மையை கொடுப்பது மட்டுமல்லாமல் உதடு, முடி, கண்கள் என அனைத்திற்குமே சிறந்த ஒரு அழகை கொடுக்கின்றன.
முகத்திற்கு – இரவு படுக்கச் செல்லும் முன் சுத்தமான முகத்தில் சிறிதளவு இந்த கிரீம் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு மென்மையான துணியால் துடைக்கவும் (அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும்). இவ்வாறு செய்து வருவதன் மூலம் முகச்சுருக்கங்கள் குறையும், முகம் பிரகாசமாகும்!
உதடுகளுக்கு – இரவு தூங்க செல்வதற்கு முன் சிறிதளவு கிரீம் எடுத்து உதட்டில் தடவி வர பனி காலங்களில் ஏற்படும் வறட்சி, வெடிப்புகள் மறையும், உதடுகள் மென்மையாகும்.
கண்களுக்கு – விரல்களால் இந்த கிரீமை சிறிதளவை எடுத்து கண்களுக்கு அடியில் பூசி மெதுவாக மசாஜ் செய்து வர கரு வலயங்கள் குறையும் .
முடிகளுக்கு – சிறிதளவு நெய் கிரீம் எடுத்து முடி நுனிகளில் தடவி, 30 நிமிடம் விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் சீயக்காய் அல்லது அதிகம் ரசாயனம் இல்லாத ஷாம்பு தேய்த்து குளித்து வர முடி ஆரோக்கியமாக மாறும்.
2. நெய் காபி (Ghee Coffee) – சுவையோடு கலந்த ஆரோக்கிம்:
நெய் காபி ரெசிபி அல்லது புல்லெட்ப்ரூஃப் காபி என்பது கீட்டோ மற்றும் பேலியோ டையட் பின்பற்றுவோரிடையே மிகவும் பிரபலமானது. சமீபத்தில், இந்தியாவிலும் இந்த உடல் எடைக் குறைப்பு குறித்த ஆர்வத்தால் இந்த காபி மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது. இந்த பதிவில், நெய் காபியைத் தயாரிக்கும் இரண்டு விதமான முறைகள் மற்றும் அதனால் கிடைக்கும் உடல் நல நன்மைகள் பற்றி காண்போம்.

தயாரிக்கும் முறை:
தேவையானப் பொருட்கள் (இன்ஸ்டன்ட் காபி பவுடர், A2 நெய், வெந்நீர்) எடுத்துக்கொள்ளவும். முதலில், ஒரு பெரிய கப் எடுத்து, அதில் இன்ஸ்டன்ட் காபி பவுடர் போடுங்கள். (கப் அளவு பெரியதாக இருக்க வேண்டும், ஏனெனில் பின்னர் அதை நன்கு கலக்க வேண்டி இருக்கும்). அதில் நல்ல தரமான A2 நெய் சேர்க்கவும். பிறகு, அளவு பார்த்து வைத்திருக்கும் வெந்நீரில் கொஞ்சம் மட்டும் அதில் ஊற்றுங்கள். இப்போது, கை ப்ளெண்டர் கொண்டு நன்றாக கலக்கவும். (நெய்யும் காபியும் ஒருசேர கலவையாக ஆகும் வரை கிளற வேண்டும்). பின்னர், மீதமுள்ள வெந்நீரை மேலிருந்து ஊற்றுங்கள். இப்போது உங்கள் நெய் காபி தயாராகிவிட்டது! இது மிருதுவான, கிரீமியான மற்றும் செம்மையான சுவையுடன் இருக்கும்.
இதன் ஆரோக்கிய நன்மைகள்:
உடல் ஆற்றலைத் அதிகரிக்கும்: காபியில் நெய் சேர்த்து குடித்தால், ஆற்றல் நீடித்து நிலைக்கும்.
மூளைச் செயல்பாட்டை மேம்படுத்தும்: நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மூளைத்திறனை அதிகரிக்கின்றன.
உணவு செரிமானத்தை ஊக்குவிக்கும்: நெய்யுடன் கருப்பு மிளகு/இஞ்சி சேர்த்தால், வாயு, அஜீரணம் குறையும்.
உடல் பளபளப்பாகும்: நெய் உள்ளே சென்று தோலுக்கு பளபளப்பைத் தரும்.
3. நெய் தேநீர் (Ghee Tea) : உடலின் சுத்தம், சக்தி, செரிமானம்
காலையில் எழுந்ததும் ஒரு சூடான கப் தேநீர்… பல நூற்றாண்டுகளாக தமிழர் வீடுகளில் இந்த நெய்தேநீர் ஒரு மருத்துவமாக, குடிக்கப்பட்டு வருகிறது ஏனெனில் இதில் உள்ள பயன்கள் அவ்வளவு. அவற்றை தயாரிக்கும் முறை மற்றும் நன்மைகளை காண்போம்.

தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள் (தண்ணீர் – 1 கப், நெய் – ½ ஸ்பூன் (A2 நெய் சிறந்தது), இஞ்சி –சிறிது, பட்டை – சிறிது). முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்து வந்ததும், அதில் சிறு துண்டு இஞ்சி மற்றும் பட்டையை இடித்து அதில் சேர்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். இதை இரண்டு நிமிடம் காய்ச்சிய பின், அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி கொள்ளுங்கள். பிறகு அரை டீஸ்பூன் நெய்யை ஊற்றி கலக்கவும். இப்பொழுது உங்கள் ஆரோக்கியமான நெய் டீ தயாராகி விட்டது. தேவைப்பட்டால் மஞ்சள் பொடி, இலவங்கம், ஏலக்காய் போன்றவை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு ரகசியம்: நெய் தேநீரில் கருப்பு மிளகு தூள் தூவினால், வாயு பிரச்சினை உடனே குறையும்!
இதன் ஆரோக்கிய நன்மைகள்:
உடல் வெப்பத்தைச் சீராக்கும்: குளிர்காலங்களில் இருமல், சளி போன்றவற்றைத் தடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: இஞ்சி, மிளகு சேர்த்தால் தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்கும்: காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மனதில் தெளிவு வரும்.
உடல் எடையைக் கட்டுப்படுத்தும்: கெட்ட கொழுப்புகள் உடலில் தேங்காமல் இருக்க உதவுகின்றன.
காலையில் வெறும் வயிற்றில் நெய் காபி/தேநீர் குடித்தால், முழு நாளும் உடல் தெம்பாக இருக்கும்!
4. ஆயில் புல்லிங் – பண்டைய ஆயுர்வேத மரபு

ஆயில் புல்லிங் ஒரு பழமையான ஆயுர்வேத செயலாகும். பொதுவாக இவற்றை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்டுத்தி செய்வதுண்டு. அனால் இதில் பாரம்பரிய எண்ணெய்களுக்குப் பதிலாக நெய்யைப் பயன்படுத்துவதன் மூலம், வாய் மற்றும் ஈறுகளுக்கு மென்மையைத் தருகிறது. பல் துலக்குவதற்கு முன், ஒரு ஸ்பூன் நெய்யை எடுத்து 10-15 நிமிடங்கள் வாயிலிட்டு ஆயில் புல்லிங் செய்து வந்தால், அதன் தனித்துவமான பலன்களை அனுபவிக்கலாம். இந்தப் பழக்கம் நச்சுகளை நீக்கி, பற்களை பளபளப்பாக்கி, ஈறுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
நெய்யின் ஆயுர்வேத நன்மைகள், இயற்கையான ஆன்டிபாக்டீரியல் விளைவுகளுடன் இணைந்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்க உதவுகின்றன.
உங்கள் தினசரி வாய் சுகாதாரத்தில் நெய்யை ஆயில் புல்லிங்கில் சேர்ப்பதன் மூலம், வீக்கத்தைக் குறைக்கவும், ஈறு அலர்ஜி (ஜிங்கிவிட்டிஸ்) போன்ற வாய்ப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
5. கோல்டன் மில்க் (Golden Milk) – நிம்மதியான உறக்கத்திற்கும் ஹார்மோன் சமநிலைக்கும்

உறங்குவதற்கு முன், ஒரு தேக்கரண்டி நெய், மஞ்சள் பொடி, மிளகு ஆகியவை சூடான பாலில் கலந்து குடிக்கலாம் . இவைகள் சேர்ப்பதன் மூலம் வறட்டு இருமல், சளி போன்றவை குணமாகும். இந்த நெய் கலந்த பால் நரம்பு மண்டலத்தை ஓரளவு அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல், இயற்கையாகவே ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது உறக்கத்திற்கான சிறந்த வழியாகும். தேவைப்பட்டால் பட்டை, இலவங்கம், ஏலக்காய் போன்றவை சேர்த்துக் கொள்ளலாம்.
நெய் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிறைந்துள்ளதால், அவை ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமானவை. இது குறிப்பாக பெண்களில் ஹார்மோன்களை சீராக்குவதற்கும், இனப்பெருக்க ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவை சிறந்த உறக்கத்திற்கும் சீரான வாழ்க்கைக்கும் முக்கியமானவை.
ஆரோக்கியத்தின் பொன்னிற ரகசியம் :
நெய் என்பது வெறும் பொருளல்ல – இது உடலையும் மனதையும் பராமரிக்கும் ஆயுர்வேத மரபின் சக்திவாய்ந்த வடிவம். இதன் முழு பலனையும் அனுபவிக்க தயாரா? உலாமார்ட்டில் இருந்து ஆர்டர் செய்யுங்கள்! பழமையான மற்றும் ஆரோக்கியத்தை இணைக்கும் தூய A2 நெய்யை உங்கள் வீட்டுக்கு அழைத்து வாருங்கள்.
“எளிமையாக வீட்டிலேயே பசு நெய் உருக்கும் முறை“ என்ற வலைப்பதிவில் A2 நெய் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்றும் மற்றும் சமையல் குறிப்புக்கள் ஆகியவற்றை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.