பல வகையான சிறு தானியங்கள் விளைவிக்கப்பட்டு குறிப்பாக தென்னிந்திய மக்களால் உண்ணப்படுகின்றன. அதில் பிரபலமான ஒரு சிறு தானியம் கொள்ளு. "கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" என்ற பழமொழிக்கேற்ப இதன் சிறப்பை உணரலாம். இது தட்டையாக பழுப்பு நிறத்தில் இருக்கும். கொள்ளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. கொள்ளு ஒரு குறைந்த கலோரி தானியம். இதனை குறைந்த அளவு எடுத்து கொள்வதால் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. தினசரி உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், கொள்ளை அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை குறையும் என்பது உண்மையே. மேலும் உடல் பருமனை குறைப்பதற்கு இது பெரும் பங்கு வகிக்கிறது. கால்சியம், புரதம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவு பொருள். உடலை வலுவாக வைத்திருக்கும். ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை உட்கொண்டு வந்தால் எடை குறைப்போடு சேர்த்து நீரிழிவு நோயும் கட்டுப்படுகிறது.
ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது.
சிறுநீரக கற்களை கரைக்கும்.
குடல் புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது.
மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது.
ஆஸ்துமா நோயிற்கு நல்ல நிவாரணமாக திகழ்கிறது.
எடை இழப்பிற்கு தகுந்த உணவு.
இதய நோய்க்கு நல்லது
சிறுநீரக பிரச்னையை சரிப்படுத்தும்.
எலும்புகளை வலுப்படுத்தும்.
தினமும் காலையில் முளைகட்டிய கொள்ளு தானியத்தை சாப்பிட்டு வர எப்படிப்பட்ட மலச்சிக்கல் பிரச்னையும் தீரும்.
இரவில் கொள்ளு தானியங்களை ஒரு கிண்ணம் நீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை எடுத்து கண்களை கழுவி வருவதால் கண்களின் எரிச்சல் நீங்கி கண் நோய்(Conjunctivitis) ஏற்படுத்தி இருக்கும் கிருமிகள் அழிந்து மிக விரைவில் குணமடையும்.
காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஏற்படும்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொள்ளு ரசம் உட்கொண்டால் வெகு சீக்கிரத்தில் குணமாவதோடு இழந்த பலத்தையும் மீட்டுக்கொடுக்கிறது.