Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
கருங்குறுவை அரிசி, இது ஒரு பண்டைய தமிழரின் நெல்வகை ஆகும். இன்றும் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலத்தில் கருங்குறுவை சாகுபடி செய்கிறார்கள். கருங்குறுவை நெல் மணிகள் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது.
தனி சிறப்புகள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இழந்த உடல் சக்தியை மீட்டு தரும்.
கருங்குறுவை அரிசி
கருங்குறுவை அரிசி, இது ஒரு பண்டைய தமிழரின் நெல்வகை ஆகும். இன்றும் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலத்தில் கருங்குறுவை சாகுபடி செய்கிறார்கள்.
கருங்குறுவை நெல் மணிகள் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது.
கருங்குறுவையின் அரிசியில் வெண்-புள்ளி/வெண் குஷ்டத்தின் தாக்கத்தை குறைக்கும். மேலும் விஷக்கடியால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் (சைடு எபக்ட்ஸ்) போக்கும் சக்தி உடையது.
கருங்குறுவையின் அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால், அது பால்போல் மாறும். இவ்வாறு மாறிய நீரின் பெயர் ‘அன்னக்காடி’ என்றழைக்கப்படும், இதை உண்டுவந்தால் மிகக் கொடிய
வியாதியான வாந்திபேதி மற்றும் காலராவின் விரிய தன்மை குறையும்.
அகத்தியர் குணபாடம் பாடலின் குறிப்பு பின் வருமாறு:
மணக்கத்தை வாலன் கருங்குறுவை மூன்றும் பிணகுட்டைச் சில்விடத்தைப் போக்கும் – இணக்குமுற ஆக்கியுண்டாற் கரப்பான் ஆகுமென் பார்கள்சிலர் பார்க்குள் இதயெண்ணிப் பார்.
அகத்தியர் குணபாடம் விளக்கம்:
மணக்கத்தை அரிசி, வாலன் அரிசி, கருங்குறுவை அரிசி இம்மூன்றும்
புண்ணையும் உடலில் உள்ள நஞ்சுகளையும் நீக்கும் தன்மையுண்டு.
Alternative Names: கருங்குறுவை அரிசி | அரிசி | KarunKuruvai Rice | Rice
No reviews yet. Be the first to share your experience!