♪ மாப்பிளை சம்பா அரிசி மற்ற அரிசி வகைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
மாப்பிளை சம்பா அரிசி ஒரு பாரம்பரிய அரிசி வகை. இது அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதன் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இதை மற்ற அரிசி வகைகளிலிருந்து வேறுபடுத்துகின்றன.
♪ இந்த ரெடிமேட் முறுக்கு மிக்ஸை பயன்படுத்தி முறுக்கு செய்வது எப்படி?
தேவையான அளவு மாவை எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவான பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் இட்டு, சூடான மரச்செக்கு கடலை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். நொடியில் சுவையான முறுக்கு தயார்!
♪ இந்த இன்ஸ்டன்ட் முறுக்கு மிக்ஸ் குழந்தைகளுக்கு ஏற்றதா?
ஆம், இந்த மாப்பிளை சம்பா முறுக்கு மிக்ஸ் இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பேக்கிங் சோடா மற்றும் எம்.எஸ்.ஜி (Monosodium Glutamate) சேர்க்கப்படவில்லை. ஆகையால், இது குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும். எனினும், சிறிய குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்கள் மென்று விழுங்கும் திறனை கவனித்துக்கொள்வது அவசியம்.
♪ சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த முறுக்கை உட்கொள்ளலாமா?
மாப்பிளை சம்பா அரிசி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருந்தாலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
♪ இந்த மாவில் செயற்கை சுவையூட்டிகள் அல்லது நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதா?
இல்லை, எங்கள் மாப்பிளை சம்பா முறுக்கு மிக்ஸில் செயற்கை சுவையூட்டிகள் அல்லது நிறமூட்டிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
♪ இந்த மாவில் காரம் அதிகமாக இருக்குமா?
இந்த மாவில் மிதமான காரம் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப காரத்தின் அளவை சரிசெய்து கொள்ளலாம்.
♪ மாப்பிளை சம்பா அரிசி பயன்படுத்தி செய்யும் ஸ்னாக்ஸ் உடலுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் தருகிறது?
மாப்பிளை சம்பா அரிசி நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் கூடிய ஒரு சிறந்த மூலிகையாக இருக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது பரம்பரிய ஸ்னாக்ஸ் மற்றும் School snacks ஆகியவற்றுக்கான சிறந்த தேர்வு ஆகும்.
♪ இந்த முறுக்கு மாவு நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த முறுக்கு மாவு நீண்ட காலம் கெடாமல் இருக்க, காற்றுப் புகாத மற்றும் ஈரப்பதம் இல்லாத இல்லாத இடங்களில் வைக்க வேண்டும். இப்படி வைத்தால், அதன் தரம் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். ஒருவேளை நீங்க பாக்கெட்டைத் திறந்து விட்டீர்கள் என்றால், மீதமுள்ள மாவை நன்கு மூடி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்பொழுது இன்னும் சில நாட்களுக்கு கெடாமல் பயன்படுத்தலாம்.