Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Strengthens Hair, Prevents Dandruff & Promotes Healthy Scalp
Grams:250 Grams
Package:Zip Pouch
கருமையான ஆரோக்கியமான கேசம் பெற சீயக்காய் தலை குளியல் பொடி, உடலின் சூட்டை குறைத்து, உறுதியான தலைமுடி பெற சீயக்காய் பொடியை நமது முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளார்கள்.
Alternative Names: பெங்காலி : பன் ரித | குஜராத்தி : சீயக்காய்| ஹிந்தி : seeyakai | Shikakai |வன் ரித | கன்னடம் : சீகே காயி | கொங்கணி : சீகாயி | மலையாளம் : சினிக்க/சீவக்க | மராத்தி : ஷிகேக்கை | ஒடிய | பான ரித | சமஸ்க்ரிதம் : கண்டவல்லி/சிவவள்ளி/ஸ்ரீரவல்லி | தமிழ்: சீகை-க்-காய்
இதன் தனி சிறப்பு: சீயக்காய் பொடியை தலைமுடிக்கு மட்டுமல்லாது, உடற்குளியல் பொடியாகவும், வாரம் இருமுறை நல்-எண்ணெய் தேய்த்து குளிக்க, எண்ணெய் பசை தன்மை நீங்க. மேலும், சாதாரண ஷாம்பூ உடன் கண்டிஷனர் அவசியம் பயன்படுத்த வேண்டும். ஆனால் சீயக்காய் பொடி இயற்கையான ஷாம்பு மற்றும் கண்டிஷனரா செயல் படுகிறது.
சீயக்காய் குளியல் பொடி
பண்டைய தமிழ் மக்கள், இதன் பழங்கள் இயற்கையான ஹேர் ஷாம்பூவாக பயன்படுத்தியாக அறியப்படுகிறது.
இதன் தனி சிறப்பு: சீயக்காய் பொடியை தலைமுடிக்கு மட்டுமல்லாது, உடற்குளியல் பொடியாகவும், வாரம் இருமுறை நல்-எண்ணெய் தேய்த்து குளிக்க, எண்ணெய் பசை தன்மை நீங்க. மேலும், சாதாரண ஷாம்பூ உடன் கண்டிஷனர் அவசியம் பயன்படுத்த வேண்டும். ஆனால் சீயக்காய் பொடி இயற்கையான ஷாம்பு மற்றும் கண்டிஷனரா செயல் படுகிறது.
மேலும்: அதன் பழங்கள் அடர் பழுப்பு நிறமாகவும், உலர்த்தும்போது சுருக்கமாகவும் இருக்கும். ஒவ்வொரு காயிலும் ஆறு முதல் பத்து விதைகள் உள்ளன. மருத்துவ நோக்கத்திற்காக அதன் இலைகள் மற்றும் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சீயக்காய் தூள் தயாரிக்க அதன் உலர்ந்த காய்கள் பயன்படுத்தப்படுகிறது.
துளசி இலை: புதிய முடி வளர, வேர் கால்களை உறுதிப்படுத்த உதவுகிறது.
சீயக்காய் : இயற்கையாக தலைமுடி சுத்திகரிக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கவும் வறண்ட தலைமுடி மற்றும் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
பூந்திக்கொட்டை: இயற்கையான Shampoo வாக செயல்பட்டு தலைமுடியின் பளபளப்பு ஏற்பட செய்கிறது.
நெல்லிக்காய்: தலைமுடியை பலப்படுத்தவும், கருமை ஆக்கவும் என பல்வேறு வகையில் தலைமுடிக்கு நன்மை செய்கிறது.
வெந்தயம்: பொடுகு வராமலிருக்க, வறண்ட தலைமுடி நன்கு வளர, உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடியது. தலைமுடி தேவையான இரும்பு சத்து மற்றும் புரதத்தை வெந்தயம் அளிக்கிறது.
செம்பருத்தி பூ மற்றும் இலை: சித்த மருத்துவத்தில் தலைமுடிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான மூலிகையாகும். இதில் உள்ள வைட்டமின் C, anti-oxidants, அமினோ அமிலங்கள் தலைமுடிக்கு கண்டிஷனர் போல செயல்ப்படுகிறது. வழுக்கை தலை வராமல் தடுக்கிறது.
ஆவாரம்பூ: இது பாக்டீரியாவுக்கு எதிரானது, அழற்சி நீக்கியவும் செயல்படுகிறது. தலை மற்றும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.
வெட்டிவேர்: இயற்கையான வாசம் மிக்க பொருளாகவும் கிருமி நாசினியாகவும் இருக்கிறது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது.
ரோஜா பூவின் இதழ்: தலைமுடியின் மயிர்கால்களை பலப்படுத்தவும், சுத்தப்படுத்தவும், அடர்த்தியாக வளரவும் உதவுகிறது. தலைமுடி வறண்டு போகாமல் இருக்கவும் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் உதவுகிறது.
வேம்பு: பாக்டீரியா, பூஞ்சை, அழற்சிக்கு எதிரானது. முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தவும் புதிய முடியை வளர உதவுகிறது.
கறிவேப்பில்லை: இளமையில் தோன்றும் இளநரை வராமல் தவிர்க்க உதவுகிறது.
கரிசலாங்கண்ணி: சித்த மருத்துவம், ஆயுர்வேதத்தில் உச்சந்தலைமுடி வளர்ச்சிக்கு, பொடுகு வராமல் இருக்க உதவுகிறது. இளநரை வராமல் தடுக்கிறது.
கார்போக அரிசி: முடிகொட்டாமல் இருக்க உதவுகிறது. சொட்டை தலை வராமல் இருக்க உதவுகிறது. பூஞ்சைக்கு எதிரானது. பேன் வராமல் இருக்க உதவுகிறது.
No reviews yet. Be the first to share your experience!